எனக்கென்று பிறந்தவளோ..
என்னை ஆட்க் கொண்டவளே...
திசைகளற்று திரிந்த
கண்களை திருப்பி..
திலகமிட வைத்தாய்..
வைத்த நாள் முதல்
உன்னிடம் வைத்த கண்ணை
நீங்காமல் பார்த்து கொண்டாய்..!
உனது கோபம்
உனது சந்தோசம்
உனது அன்பு..
என்னை ஆட்சி செய்கிறதே...
ஒவ்வொரு நொடியும் உனை விட்டு விலகிடவே நினைக்கிறேன்..
நான் நானாக இருக்க...
இன்று.. இக்கணம் வரை முடியவில்லை...
இந்த போராட்டம் எதுவரை..!
- அன்பானவளே (1)
- அன்பே (1)
- அன்றும் இன்றும் (1)
- அம்மா (1)
- இதயத் தேடல் (1)
- இதயத்தில் நீ (1)
- இதயமானவளே (1)
- இதயமே (1)
- இதுதான் உண்மை (1)
- இதுவே நிஜம் (1)
- இனியவளே (2)
- இயற்கை காதலன் (1)
- இல்லாதது... (1)
- உனக்காக உயிர் வாழ்வேன் (1)
- உனக்கே உயிரானேன் (1)
- உனது நினைவுகளில் தான் (1)
- உனைத்தேடும் என் விழிகள் (1)
- உன் பார்வைகளை (1)
- உன் பிரிவினில் (1)
- உன் பெயரை (1)
- உயர்வானவளே (2)
- உயிரே (2)
- எங்கே என் காதலி (1)
- எனக்கானவளே (1)
- எனக்கென்று பிறந்தவளோ (1)
- எனது அழகி (1)
- என் உயிர் தோழி (1)
- என் கனவே நீதான் (2)
- என் காதலின் (1)
- என் முதல் காதல் (1)
- என் விழியில் நீ (1)
- என்னவளே (1)
- எப்படி (1)
- எப்படிச் சொல்வேன் காதலை (1)
- எப்போது வருவாய் (2)
- ஏதோ (1)
- ஒன்றும் இல்லை (1)
- ஒரு நேசம் முடிவுற்றது (1)
- கண்ணுக்குத் தெரியா கடவுள் (1)
- கவலை.....கவலை..... (1)
- கவிதை என்கிறாயே (1)
- காதலிக்கும் போது (1)
- காதலே வருவாயா (2)
- காதலை காதலிக்கின்றேன் (1)
- காதலைப்பற்றி சில (1)
- காதல் என்பது யாதெனில் (1)
- காதல் கவிதை (1)
- காத்திருக்கிறேன் (1)
- காத்திருப்பு (2)
- சிறை மீட்டிடு (1)
- சில சமயம் (1)
- சுழல் (1)
- சொல்லி விடு (2)
- தமிழா (1)
- தமிழா தமிழில் பேசு (1)
- தாலாட்டு (1)
- துரத்துகிறேன் என்னைத்தான் (1)
- தொட்டால் சிணுங்கி (1)
- நட்பு (1)
- நட்பு வேண்டும் (1)
- நட்பும் காதலும் (1)
- நான் உன்னைக் காதலிக்கிறேன் (1)
- நினைப்பு (1)
- நினைவில் ஒரு காதல் (1)
- நீ ஆசைக் கொண்டாய்….. (1)
- நீ ஏ(பே)சு (1)
- நீயே சொல்லு (1)
- பிரிவின் வேதனை (1)
- பேரழகி (1)
- பொய் சொல்ல கூடாது காதலி…… (1)
- மனதில் (1)
- மரம் தரும் வரம் (1)
- மழழையாய் மாறேனோ? (1)
- யார் குற்றமோ (1)
- வரம் வேண்டும் (1)
- வலிக்கிறது (1)
- விடுதலை வேட்கை (1)
- விளிம்பில் என் இனம் (1)
![]()
தும்பைப்பூசெடி கொண்டு
தும்பி துரத்திய காலம்!
கட்டெரும்புக்கு கண்ணீர்விட்டு
கல்லறை எழுப்பிய காலம்!
அர்ச்சுனன் துணைவேண்டி
அடைமழை இடிகேட்டு அரண்ட காலம்!
அம்மாவின் முந்திசீலையை
சுண்டுவிரலிடுக்கில்சுற்றி சுகமாய் கண்ணுரங்கிய காலம்!
ஆஹா!மீண்டும் மழழையாய் மாறேனோ?!

எறும்பு ஊர கல்லும்
தேயுமா என்பது தெரியாது
உன் மனக்கல் மீது யார்
ஊர்ந்தாலும்
அவர்கள்தான் தேய்வார்கள்
என்பது மட்டும் தெரியும்
*
என் கவிதைகளின் எழுத்துப்
பிழைகளை நீ சரி செய்வதைவிட
மிக அழகு உன் உடையை நீ
சரி செய்வது
*
நீ
ஆசைபட்டபொருட்கள்
எல்லாவற்றையும்
வாங்கி பத்திரமாய்
வைத்திருக்கிறேன்
பத்திரப் படுத்தியதற்காகவாவது
என் மேல் உனக்கு ஆசை
வந்துவிடும் என்ற நம்பிக்கையில்
*
குழந்தையை தூக்கி கொஞ்சுகிறாய்
குழந்தையோ உன்னைக் கொஞ்சுகிறது
குழந்தை நீ தூக்கியதற்காய்
*
பூ
செடியை
சுற்றுமா என்ன..?
நீ
துளசிச் செடியை
சுற்றும்போது
என்னை நானே
கிள்ளிப் பார்க்கிறேன்

என் பள்ளி காலத்தில்
வந்தது முதல் காதல்
அவளின் ஒரு நிமிட பார்வைக்கு
அடிமையாகி போனேன்
என் முகம் பார்த்து பின் முதுகு
துளைத்துப்போனது உன் பார்வை
ஈட்டியோ என்று இருந்தேன்
இல்லை அது நங்கூரம் என்று
என் நெஞ்கில் பாய்ச்சி விட்டு போனாள்
அடுத்த ஆண்டு பள்ளித்திறப்பில்
ஆவலோடு எதிர் பார்த்தேன் உன்னை
ம்ம் நேற்று வரை வரவில்லை நீ
இருபது வருடம் போனபின்பு
கண்டேன் உன்னை
உன் பிள்ளைகளுடன்
எங்கே அந்த கண்கள்
எங்கோ வெறித்த பார்வையில்
எத்தனையோ சோகங்கள்
உன் கண்கள் கண்டு
கலங்கின என் கண்கள்
இறைவா இவள் கண்களில் உயிர் கொடு.
இவள் வாழ்வில் ஒளி கொடு
Subscribe to:
Posts (Atom)




