எனக்கென்று பிறந்தவளோ..
என்னை ஆட்க் கொண்டவளே...
திசைகளற்று திரிந்த
கண்களை திருப்பி..
திலகமிட வைத்தாய்..
வைத்த நாள் முதல்
உன்னிடம் வைத்த கண்ணை
நீங்காமல் பார்த்து கொண்டாய்..!
உனது கோபம்
உனது சந்தோசம்
உனது அன்பு..
என்னை ஆட்சி செய்கிறதே...

ஒவ்வொரு நொடியும் உனை விட்டு விலகிடவே நினைக்கிறேன்..
நான் நானாக இருக்க...

இன்று.. இக்கணம் வரை முடியவில்லை...
இந்த போராட்டம் எதுவரை..!


கைவிளக்கேந்திய காரிகையாய்
கனவில் தேவதைதான் வந்தாள்,
வண்ணச் சிறகுகள் மினுமினுக்க
வரம்தான் என்ன வேண்டுமென்றாள்!
"நிஜத்தில் உன்னைப் பார்க்கவே
நீண்டநாளாய்ஆசைஎன்றேன்"
'கண்ணை விழித்துப்பார்!' என்றாள்,
கண்டேன் எந்தன் தாய் அங்கே!
ANIMATED GLITTER ANGEL ANGELS FANTASY MYSTICAL  MYSTIC GRAPHICS IMAGES ANIMATED GLITTER ANGEL ANGELS BACKGROUNDS  LAYOUTS FANTASY MYSTICAL MYSTIC Pictures, Images and Photos



மண்சரிவால் மண்ணாகிப்போன மனிதர்கள்,
கலைந்துபோன கனவுகள்,
இத்தனையும் ஏன்?
இயற்கையை நேசி!
இயற்கையை சுவாசி!
இது உன்னால் இயன்றால்
மரம் தரும் நல்வரம்!
இல்லாவிட்டால் மண்ணுக்கு நீ உரம்!


தும்பைப்பூசெடி கொண்டு
தும்பி துரத்திய காலம்!

கட்டெரும்புக்கு கண்ணீர்விட்டு
கல்லறை எழுப்பிய காலம்!

அர்ச்சுனன் துணைவேண்டி
அடைமழை இடிகேட்டு அரண்ட காலம்!

அம்மாவின் முந்திசீலையை
சுண்டுவிரலிடுக்கில்சுற்றி சுகமாய் கண்ணுரங்கிய காலம்!

ஆஹா!மீண்டும் மழழையாய் மாறேனோ?!




எறும்பு ஊர கல்லும்
தேயுமா என்பது தெரியாது
உன் மனக்கல் மீது யார்
ஊர்ந்தாலும்

அவர்கள்தான் தேய்வார்கள்
என்பது மட்டும் தெரியும்

*

என் கவிதைகளின் எழுத்துப்
பிழைகளை நீ சரி செய்வதைவிட
மிக அழகு உன் உடையை நீ
சரி செய்வது

*

நீ
ஆசைபட்டபொருட்கள்
எல்லாவற்றையும்
வாங்கி பத்திரமாய்
வைத்திருக்கிறேன்

பத்திரப் படுத்தியதற்காகவாவது
என் மேல் உனக்கு ஆசை
வந்துவிடும் என்ற நம்பிக்கையில்

*

குழந்தையை தூக்கி கொஞ்சுகிறாய்
குழந்தையோ உன்னைக் கொஞ்சுகிறது
குழந்தை நீ தூக்கியதற்காய்

*

பூ
செடியை
சுற்றுமா என்ன..?

நீ
துளசிச் செடியை
சுற்றும்போது

என்னை நானே
கிள்ளிப் பார்க்கிறேன்



கனவு காண யாரும்
உறங்கப் போவதில்லை

நான் மட்டும்தான்
பகல் கனவு கண்டு
கொண்டு இருக்கிறேன்
நான் தூங்குவதாக

நீ
என்னை மட்டுமல்ல
என் உறக்கத்தையும்
சேர்த்துத்தான்
கலைத்துவிட்டாய்

மறுபடி நான்
உன்னை சந்திக்க
நேர்ந்தால்

என் உறக்கத்தையாவது
கெஞ்சிக் கேப்பேன்

மறுபடி நான்
தூங்கிப்போனால்

என் கனவில் உன்னையே
கெஞ்சி கேப்பேன்



என் பள்ளி காலத்தில்

வந்தது முதல் காதல்

அவளின் ஒரு நிமிட பார்வைக்கு

அடிமையாகி போனேன்

என் முகம் பார்த்து பின் முதுகு

துளைத்துப்போனது உன் பார்வை

ஈட்டியோ என்று இருந்தேன்

இல்லை அது நங்கூரம் என்று

என் நெஞ்கில் பாய்ச்சி விட்டு போனாள்

அடுத்த ஆண்டு பள்ளித்திறப்பில்

ஆவலோடு எதிர் பார்த்தேன் உன்னை

ம்ம் நேற்று வரை வரவில்லை நீ

இருபது வருடம் போனபின்பு

கண்டேன் உன்னை

உன் பிள்ளைகளுடன்

எங்கே அந்த கண்கள்

எங்கோ வெறித்த பார்வையில்

எத்தனையோ சோகங்கள்

உன் கண்கள் கண்டு

கலங்கின என் கண்கள்

இறைவா இவள் கண்களில் உயிர் கொடு.

இவள் வாழ்வில் ஒளி கொடு